நமது ஈழத்து சகோதரர்களின் படைப்பு ஒரு முழு நீள திரைப்படம்
ஏழைக்குடும்பத்தில் பிறந்த தாய் தந்தை அற்ற இன்னொருவரின் அரவணைப்பில் வளருகிறார் கதாநாயகன். வளர்ப்பவரும் பெரிய பணக்கரனுமில்லை ஒரு வாகன திருத்துனர் சொந்தமாக கடை வைத்திருக்கிறார்.
கதாநாயகி ஒரு உயர் யாதி தொழிலதிபரின் ஒரே ஒரு மகள் . கதாநாயகன் படிக்கும் கல்லூரியில் அவருடைய வகுப்பில் தான் கதாநாயகி புதிதாக சேருகிறார் அவர்கள் ஒருவருடன் ஒருவர் சந்திகிறார்கள் இருவர்களுக்குள்ளும் காதல் மலர்கிறது காதலை சொல்கிறார்கள். வழமை போல கல்லூரியில் கதாநாயகனுக்கு எதிரியாக ஒரு வில்லன் இடைக்கிடை வந்து தலயை காட்டிட்டு செல்கிறார் இவர்களின் காதலை கதநாயகியின்அப்பாவிடம் தெரிய படுத்துவதும் அந்தகல்லூரி வில்லன்தான் அதன்பின்னர் கதாநாயகியின்அத்தைபையன் ஒருவர் இருக்கிறார் அவரும்ஒரு வில்லனாக வலம் வருகிறார் இவ்வளவு பிரச்சனைகளுக்குள் இவர்களின் காதலை ஜெயிப்பதற்கு காதலர்கள் இருவரும் போராடுகிறார்கள் என்பது தான் .ஒருதென்னிந்திய சினிமா பாணியில் திரைக்கதை சென்று கொண்டிருக்கிறது .
பாடல் வரிகள் ரொம்ப நல்லா இருக்கிறது அத்துடன் அந்த பாடலை பாடியவர்களின் குரல்களும் ரொம்பவும் ரொம்பவும் நல்லா இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரர்களே மிகவும் நீண்ட நாட்க்களுக்கு பிறகு இப்படி படைப்பு ஈழத்தில் இருந்து வந்திருப்பது பார்க்க ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது
ஆனால் நண்பர்களே இந்த படத்தை பார்த்தவுடன் எனக்குள் ஒரு கவலை என்னை அறியாமலே ஏற்பட்டு விட்டது .
காரணம் .
இவ்வளவு காலமும் எதற்காக போராடினமோ அதை இந்த படத்தில் தொலைத்து விட்டார்கள் .அது தான் எமது மொழி சகோதர்களே ஏன் இப்படி செய்தீர்கள் . எங்களின் மொழியை தொலைத்து தான் எங்களின் பதிவுகள் படைப்புக்கள் வர வேண்டும் என்றால் அப்படியான படைப்புக்களை படைக்காமல் ஒதுக்கி விடுவது எல்லோருக்கும் நல்லது
அடுத்து அதில் வரும் கதா பாத்திரங்கள் எல்லாமே தென் இந்திய திரைப்படத்தில் வருவதை போலவே அமைத்துள்ளீர்கள் ஏன் அப்படி செய்தீர்கள்.
(ஆனால் ஒன்று மட்டும் விளங்குது நீங்கள் எல்லோரும் விஜய் ரசிகர்களாக இருக்கின்றீர்கள் போலும் )
சரி முடிந்ததது முடிந்து விட்டது இனிவரும் படைப்புக்களில் சரி கவனித்து முதல் விட்ட பிழைகளை விடாமல் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் முகமாக உங்களின் படைப்புக்கள் வெளி வரும் என்று நாங்கள் நம்புகிறோம்